இரண்டு சஜ்தாவிற்கு இடையில் திக்ரு கூற மறந்து மீதம் உள்ள தொழுகையை நிறைவு செய்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
இரண்டு சஜ்தாவிற்கு இடையில் திக்ரு கூற மறந்து மீதம் உள்ள தொழுகையை நிறைவு செய்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
இதற்கான பதிலை அறிவதற்கு முன், தொழுகையில் உள்ள கடமைகளை பற்றி அறிந்திருத்தல் வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
தொழுகையின் கடமைகள்:
தொழுகையின் கடமைகள் எட்டு.
1.முதல் தக்பீரை தவிர எல்லா தக்பீர்களும்.
2.ருக்கூவில் கூறும் திக்ர் “ سبحان ربي العظيم"
3.இமாமாக இருப்பவரும் தனியாக தொழுபவரும் ருக்கூவில் இருந்து எழும்போது கூறவேண்டியது.
“سمع الله لمن حمده"
“سمع الله لمن حمده"
4.தொழுபவர்கள் அனைவரும் அதை தொடர்ந்து கூறவேண்டிய
“ربنا و لك الحمد"
5.சுஜூதில் கூற வேண்டிய திக்ர். “سبحان ربي الأعلى"
6.இரண்டு சுஜூதிற்கு நடுவே கூற வேண்டிய திக்ர். “رب إغفرلي"
7.முதல் தஷஹ்ஹுதில் இருப்பது.
8.முதல் தஷஹ்ஹுதின் இருப்பில் கூற வேண்டிய திக்ருகள்.
மறதியினால் இதில் ஏதாவது கடமையை விட்டுவிட்டால் , மறதிக்கான சஜ்தா செய்யும் பொழுது இந்த கடமை நிறைவேறிவிடும், தொழுகை முழுமை பெறும்.
கேள்வியில் கேட்கப்பட்ட செய்ய மறந்த செயல் கடமையில் இருந்துள்ளதாகும். ஆகையால் தஸ்லீமிற்கு முன் ( தொழுகை முடிவில ஸலாம் கூறுவதற்கு முன்) மறதிக்கான சஜ்தா செய்ய வேண்டும். இதுவே போதுமானதாகும்.
தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை
Source :- albayaanmv.com/?p=839
தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை
Source :- albayaanmv.com/?p=839
Comments
Post a Comment