வீட்டில் தனியாக தொழும்போது , பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு ) மற்றும் இகாமத் கூறுவதற்கான சட்டம் என்ன?
கேள்வி : வீட்டில் தனியாக தொழும்போது , பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு ) மற்றும் இகாமத் கூறுவதற்கான சட்டம் என்ன?
கேள்வியாளர் இன்றைய சோகமான சூழ்நிலையில் வீட்டில் தொழும் பொழுது கூறவேண்டியது பற்றி கேட்கிறார் என்று எண்ணுகிறேன்.
மஸ்ஜிதில் ஜமாத் தொழுகையை தவற விட ஆரோக்கியமான எந்த ஆணுக்கும் அனுமதி இல்லை.
அவருக்கு இது கடமையாகும்.
இதன் பிறகு, தனியாக தொழும்பொழுது, மஸ்ஜிதில் அல்லாமல், பாங்கும் இகாமத்தும் கூறுவது பரிந்துரைக்கப் பட்டதாகும்.
பெரும்பாலான அறிஞர்களின் கருத்து இதுவாகும். ஹனபி, ஷாஃபி, ஹம்பலி மற்றும் மாலிக்கி மத்ஹப்களின் கருத்தும் இதுவேயாகும். இது பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அவர்கள் கூறும் ஆதாரங்கள் :
அபூ-ஸயீத் அல் குத்ரீ رضي الله عنه அறிவிப்பதாவது “ (இந்த ஸஹாபா தனது தோழரிடம் கூறினார்கள்) உன்னுடைய மந்தையை பாதியாவின் வெளியில் மேய்ப்பது உனக்கு விருப்பமானது என்று நான் அறிவேன். நீ உன்னுடைய ஆடுகளுடன் நகரத்தின் வெளியில் இருக்கும் பொழுது சப்தமாக பாங்கு கூறுவீராக. நிச்சயமாக நான் நபி ﷺ கூற கேட்டேன், “ ஜின்களும் மனிதர்களும் ஏனைய படைப்பினங்களும், எவை எல்லாம் பாங்கை செவியுறுகின்றனரோ அவை மறுமையில் சாட்சி கூறாமல் இருப்பதில்லை.”
அதே போல், மற்றும் ஓர் ஆதாரம் இதை பரிந்துரைக்கப்பட்ட செயல் என்று உணர்த்துகிறது , அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் ஒரு ஸஹாபா செய்ததாக அறிவிக்கிறார்கள் : ஒரு ஸஹாபி மஸ்ஜிதிற்கு வந்தார், ஜமாத் தொழுகை முடிந்திருந்தது , ஆகையால் அவர் அதான் கூறி அவருக்கு பிறகு வந்தவர்களுடன் தொழுதார்.
أبو يعلى في مسنده (٤٣٥٥)، قال الهيثمي في مجمع الزوائد(٢/ ٤ ورجاله رجال الصحيح
இந்த செயல்களை பார்க்கும் பொழுது , இது விரும்பத்தக்க செயல் என்பதை அறிய முடிகிறது.
இதே விசயத்தில் , அல்-இமாம் அல்-அல்லாமா அல்-அல்பானி رحمه الله (இந்த ஹதீஸை குறிப்பிட்டு) கூறினார்கள் ,
يعجب ربك من راعي غنم في رأس شظية بجبل يؤذن بالصلاة ويصلي فيقول الله عز وجل انظروا إلى عبدي هذا يؤذن ويقيم الصلاة يخاف مني قد غفرت لعبدي
நபி ﷺ கூறினார்கள்,” உங்கள் இறைவன் மலை முகட்டில் ஆடு மேய்க்கும் ஒரு இடையனை பார்த்து பூரிப்படைகிறான். அவன் அங்கேயே தொழுகைக்கான அழைப்பையும் கொடுத்து தொழுகிறான். அல்லாஹ் கூறுகிறான் ‘எனது அடியானை பாருங்கள் ! அவன் தொழுகைக்காக அழைப்பையும் கொடுத்து தொழுகிறான். அவன் என்னை அஞ்சுகிறான். நான் நிச்சயமாக அவன் பாவங்களை மன்னித்து விட்டேன்.’
( இதன் பிறகு அல்-அல்லாமா அல்-அல்பானி رحمه الله கூறுகிறார்கள் ) இந்த ஹதீஸ் தனியாக தொழும் ஒருவர் பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு) கூறுவது விரும்பத்தக்கது என்பதற்கு ஆதாரமாகும். தவறாக தொழுத நபித்தோழரை பற்றி வரும் ஹதீஸில் பாங்கும் இகாமத்தும் கூற கட்டளை இடப்பட்டுள்ளது.”
41 السلسلة الضعيفة
இந்த பாடத்தில் , அல்-அல்லாமா இப்னு பாஸ் رحمه الله கூறினார்கள் ,” பாங்கும் இகாமதும் கூறுவது சுன்னத் ஆகும். அது கடமை என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. எனினும், பொதுவான அறிவிப்புகளை பின்பற்றி பாங்கும் இகாமதும் கூறுவது விரும்பத்தக்கதும் பாதுகாப்பானதும் ஆகும்...
தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை
Comments
Post a Comment