பெண்களை தொடுவதினால் உளூ முறிந்துவிடுமா?
பெண்களை தொடுவதினால் உளூ முறிந்துவிடுமா என்பதில் அறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.
முதல் கருத்து: ஒரு பெண்ணை தொடுவதினால் எல்லா சந்தர்ப்பங்களிலும் உளூ முறிந்துவிடும்.
அதாவது , இச்சையுடனோ, இச்சை இல்லாமலோ, நோக்கத்துடனோ, நோக்கம் இல்லாமலோ அல்லது அறியாமல் தொடுவதாலோ. இது அஷ்-ஷாஃபி رحمه الله வின் மத்ஹப் உடைய கருத்தாகும்.
இது ஷாஃபி மதுஹபின் கருத்தானதால் இப்படி தொடுவதினால் உளூ முறிந்து விடும் என்பது பரவலான கருத்தாக உள்ளது. எனினும், ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களில் இதுவே மிக பலகீனமாதாகும். இது குறித்து இமாம் ஷாஃபி رحمه الله குறிப்பிடுகிறார்கள்: சில ஆதாரங்களின் அடிப்படையில் ‘தீண்டுவது’ என்பதை இவ்வாறு அர்த்தம் செய்துள்ளார்கள். அதில் ஒன்று , அல்லாஹ் கூறுகிறான் :
أَو لا مَسْتُمُ النِّسَاء
நீங்கள் பெண்களைத் தீண்டுவதினாலோ.
இந்த ஆயத்தின் பொருள் தீண்டுவது என்பதால் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள். எனினும், சந்தேகத்திற்கு இடமில்லாமல் தீண்டுவதின் பொருளை தஃப்ஸீரில் பார்போமானால், அது வெறுமனே உடல் தீண்டுதல் அல்ல என்பதை விளங்கலாம்.
இரண்டாம் கருத்து: இமாம் அபூ ஹனீபாرحمه الله வின் கருத்து அல்லது ஹனபி மத்ஹபின் கருத்து. இந்த மத்ஹப் கூறுகிறது இச்சை உடனோ இச்சை இல்லாமலோ
அல்லது எந்த முறையில் தீண்டினாலும் உளூ முறியாது. எனினும் இச்சை நீர் போன்று ஏதாவது வெளியேறினால் உளூ முறிந்து விடும். தீண்டுவதினால் மட்டும் உளூ முறியாது. இதற்கு ஆதாரமாக நபி ﷺ ன் மனைவிகள் رضي الله عنهم உடலை தீண்டுபவர்களாக இருந்துள்ளார்கள்.
அவைகளில், புஹாரி 382 ல் உள்ள அறிவிப்பில் :
‘ஆயிஷா رضي الله عنها கூறினார்கள் , “ நபி ﷺ தொழுது கொண்டு இருக்கும் போது நான் எனது கால்களை அவர்கள் முன்பாக நீட்டுவேன். நபி ﷺ சஜ்தா செல்லும் பொழுது எனது காலை மாற்றுவார்கள் நான் எனது காலை இழுத்து கொள்வேன் பிறகு அவர்கள் ﷺ எழுந்த பிறகு கால்களை மீண்டும் நீட்டுவேன்.
பெண்ணை தொடுவதினால் உளூ முறியும் என்றால் உளூவும் தொழுகையும் செல்லாது என்று இந்த மத்ஹபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை கொண்டு வேறு சில கருத்துகளும் உள்ளன.
மூன்றாவது கருத்து : இந்த கருத்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணை இச்சையோடு தீண்டினால் உளூ முறியும் இச்சை இல்லாமல் தீண்டினால் உளூ முறிவதில்லை.
இது மாலிக்கி மத்ஹப் மற்றும் ஹம்பலி மத்ஹப் உடைய கருத்தாகும்.
இந்த இரண்டு மத்ஹபில் உள்ளவர்கள் இந்த ஆயத்தை ( أَو لا مَسْتُمُ النِّسَاء ) “ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டுவதினாலோ” என்பதில் உள்ள ‘தீண்டுதல்’ என்றால் உடலுறவு கொள்வது என்ற முடிவிற்க்கு வந்தார்கள்.
அதாவது உங்கள் மனைவியுடன் உடலுறவு கொண்டால். சஹாபா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رضي الله عنهما இப்படி விவரித்தார்கள். அதாவது தீண்டுதல் இச்சையுடன் இருந்தால் உளூ முறிந்து விடும்.
மேற்கூறிய அனைத்து ஆதாரங்களில், மிகவும் ஆதாரப்பூர்வமான கருத்து: பெண்களை தொடுவதால் உளூ முறிவதில்லை அந்த தீண்டுதல் இச்சையுடன் இருந்தலும் இல்லாமல் இருந்தாலும் சரியே. இரு (ஆண், பெண்) பிறப்புறுப்புகளும் தொடுவதாலே உளூ முறியும்.
அல்லது இச்சை நீர் போன்று ஏதாவது வெளியேறினால். எனினும் தீண்டுவது மட்டுமே உளூ முறிவதற்கு ஒரு காரணமாகாது.
இதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததே இதற்கு காரணமாகும். மேலும் நபி ﷺ தனது மனவியரை தீண்டிய பின் உளூ செய்யவில்லை. ஆதாரம்:
أن النبي ﷺ قبل بعض نسائه ثمم صلى ولم يتوضأ
“நிச்சயமாக நபி ﷺ தனது மனைவிகளை முத்தம் இடுவார்கள் (பிறகு தொழுகைக்காக செல்வார்கள்). அதன் பிறகு அவர்கள் ﷺ உளூ செய்யவில்லை.” இந்த ஹதீஸின் அறிவிப்பில் பலகீனம் இருந்தாலும், இந்த ஹதீஸ் பலர் மூலமாக அறிவிக்க பட்டுள்ளது, இதுவே இந்த விசயத்தில் ஆதாரமாகும்.
இந்த கருத்து ஷேக்குல் இஸ்லாம் இப்னு தைமியா விரும்பிய கருத்தாகும் 12/222. இக்காலத்தின் தலை சிறந்த அறிஞர்கள் இப்னு பாஸ் 10/134 மற்றும் இப்னு உதைமீன் 1/286 رحمهم الله இக்கருத்தை மேற்கொள்கிறார்கள்.
மேலும் இவ்வாறே சவூதி அரேபியாவின் ஃபத்வா கமிட்டி , அல்-லஜ்னா அத்-தாய்மா 5/266 கூறினார்கள்.
இவ்விஷயத்தை நான் தெளிவாக விவரித்துள்ளேன் என்று எண்ணுகிறேன்.
தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை
Comments
Post a Comment