சஜ்தாவின் பொழுது கால்களை எவ்வாறு வைப்பது?
இந்த விசயத்தில் உலாமாக்கள் இடையே கால்களை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
முதல் கருத்து: சஜ்தாவின் போது கால்களை பிரித்து வைக்க வேண்டும். இது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாக உள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் கூறுவது, ஹதீஸில் சஜ்தாவின் போது இரண்டு மூட்டிகாலையும் தொடைகளையும் பிரித்து வைக்கவேண்டும் என்று உள்ளது. கால்களும் இதில் சேரும் என்று கூறுகிறார்கள்.
இந்த கோணத்தில் , அபூ தாவூத் رحمه الله தன்னுடைய சுனனில் 735 , நபி ﷺ விடம் இருந்து உள்ள ஹதீஸை குறிப்பிடுகிறார்கள் : அந்த ஹதீஸில் நபி ﷺ எவ்வாறு தொழுதார்கள் என்று அபூ ஹுமைத் رضي الله عنه குறிப்பிடுகிறார்கள் :
و إذا سجد فَرَّج بين فخذيه
“மேலும் அவர்கள்( நபி ﷺ) சஜ்தாவில் அவர்களுடைய தொடையை அகற்றி வைத்திருப்பார்கள். “
அஷ்-ஷௌகானி رحمه الله கூறினார்கள் : ஹதீஸில் உள்ள “ அவர்கள் ﷺ தொடைகளை பிரித்து வைத்தார்கள் “ என்றால் இரண்டு தொடை, இரண்டு மூட்டு மற்றும் கால்களை பிரித்து வைப்பது”.
ஷாஃபி மத்ஹபில் இது பிரபலம் ஆனதால் இது இங்கே நம்மிடம் சாதாரணமாக உள்ளது.
இரண்டாம் கருத்து: சஜ்தாவின் பொழுது இரண்டு கால்களையும் சேர்த்து வைப்பது. தற்காலத்தில் தோன்றிய பெரிய மார்க்க அறிஞரான அல்-இமாம் அஷ் ஷேக் அல் அல்பானி رحمه الله மற்றும் பிக்ஃஉ அறிஞரான அஷ்-ஷேக் இப்னு உதைமீன் رحمه الله ஆகிய இருவரும் இந்த கருத்தை தான் தேர்வு செய்கிறார்கள்.
இந்த கருத்தை கூறிய அறிஞர்கள் ஆதாரமாக முஃமினீன்களின் தாய் ஆயிஷா رضي الله عنها அறிவிப்பை கூறுகிறார்கள்
فقدت رسول الله صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ وكان معي على فراشي، فوجدته ساجداً، راصَاً عقبيه، مستقبلاً بأطراف أصابعه القبلة
ஆயிஷாرضي الله عنها கூறினார்கள் : “ ஒரு இரவு எனக்கு நபி ﷺஅவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை ( நபி ﷺ எங்கு இருந்தார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை ) என்னுடன் அவர் படுக்கையில் இருந்தார். பின்பு நான் அவரை சஜ்தாவில் பார்த்தேன். அவர்களின் இரண்டு கால்களும் சேர்ந்து இருந்தது. மற்றும் அவர்களின் பெறுவிரலின் நுனி கிப்லாவை நோக்கி இருந்தது.”
இந்த அறிவிப்பு , இப்னு குஸைமாவின் ஸஹீஹ்ல் 1/328, இப்னு ஹப்பானின் ஸஹீஹ்ல் 5/260, அல் ஹாகிமின் முஸ்ததுரக் 2/325 மற்றும் அல் பைஹகியின் “அஷ்-சுன்னாவு அல்-குப்ரீ” 2/167 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்ஆகும். அஷ்-ஷேக் அல்-அல்பானி رحمه الله தன்னுடைய ஸிபதுஸ் ஸலாவில் இதை ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஹதீத் ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவே பலமானதும் தெளிவானதுமாகும்.
ஆகவே, தொழுகையில் சஜ்தாவின் பொழுது இரண்டு கால்களையும் சேர்த்து வைப்பது சுன்னா ஆகும். இதுதான் நபி ﷺ அவர்களின் சுன்னா ஆகும்.
தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை
Comments
Post a Comment