ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்வது.


ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்வது. 

முதலாவதாக: அறிஞர்கள் இடையே இதற்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன. 

முதல் கருத்து:- பெரும்பாலான அறிஞர்களுடையது, ஒட்டக கறி சாப்பிட்டால் உளூ முறியாது. 

இரண்டாவது கருத்து:- ஒட்டக கறியை சமைக்காமலோ சமைத்தோ சாப்பிட்டாலும் உளூ முறிந்துவிடும். எனினும், ஒட்டக பாலை குடிப்பதாலோ அல்லது ஒட்டக கறி சமைக்க பயண்படுத்திய தண்ணீரை உபயோகிப்பதாலோ அல்லது ஒட்டக கறி சேர்க்கப்பட்டதை சாப்பிடுவதாலோ உளூ முறியாது. 

ஒட்டக கறி சாப்பிட்டால் உளூ முறியும் என்னபதற்கு ஆதாரம் ஜாபிர் பின் ஸமூரா رضي الله عنه அறிவிக்க கூடிய ஹதீஸ் :

أن رجلاً سأل رسول الله صلى الله عليه وسلم: أأتوضأ من لحوم الغنم؟ قال: “إن شئت فتوضأ وإن شئت فلا توضأ”، قال: أتوضأ من لحوم الإبل؟ قال: “نعم، فتوضأ من لحوم الإبل”، قال: أصلي في مرابض الغنم؟ قال: نعم، قال: أصلي في مبارك الإبل؟ قال: لا 

“ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் ﷺ கேட்டார் , ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் உளூ செய்ய வேண்டுமா என்று. அவர்கள் ﷺ கூறினார்கள் : நீ விரும்பினால் உளூ செய்துகொள், நீ விரும்ப வில்லை என்றால் செய்யாதே. அவர்(மீண்டும் ) கேட்டார் : ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்ய வேண்டுமா? அவர்கள் ﷺ கூறினார்கள் : ஆம், ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்து கொள். அவர் ( மீண்டும் ) கேட்டார் : நான் ஆட்டுத் தொழுவத்தில் தொழலாமா? அவர்கள் ﷺ கூறினார்கள் : ஆம். அவர் மீண்டும் கேட்டார் : ஒட்டகம் வாழும் இடத்தில் நான் தொழலாமா? அவர்கள் ﷺ கூறினார்கள்: வேண்டாம்.”

மேலும் அல் பரா பின் ஆரிப் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் : நபி ﷺ அவர்களிடம் ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்வது பற்றி கேட்கப்பட்டது. அவர்கள் ﷺ கூறினார்கள் : “ நீங்கள் உளூ செய்ய வேண்டும்.” அவர்களிடம் ﷺ ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் ஒருவர் உளூ செய்ய வேண்டுமா என்று கேட்ட பொழுது , அவர்கள் ﷺ கூறினார்கள் “ வேண்டாம் செய்ய வேண்டியது இல்லை.” மேலும் அவர்களிடம் ﷺ கேட்கப்பட்டது ஓட்டகம் வாழும் இடத்தில் தொழலாமா என்று , அவர்கள் ﷺ கூறினார்கள் “ அங்கே தொழ வேண்டாம் , அது ( ஒட்டகம் ) சைத்தான்களில் உள்ளது.” மேலும் அவர்களிடம் ﷺ கேட்கப்பட்டது ஆடுகள் வசிக்கும் இடத்தில் தொழலாமா என்று, அவர்கள் ﷺ கூறினார்கள், “ ஆம், அங்கே தொழுது கொள்ளுங்கள் ,  அது ஆசீர்வதிக்கப்பட்ட மிருகம்.”

கட்டளையின் பெருள் கடமை என்பதாகும். உளூ ஷரீயாவில் உள்ளது. ஆகையால் இதை ஆர்வமூட்டியதாக கொள்ள முடியாது. உளூ என்பது கைகள் வாயை கழுவுவது மட்டும் ஆகாது. இதை கடமையில் இருந்து பிரித்து பார்ப்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. 

அஹ்மது பின் ஹம்பல் மற்றும் இஸ்ஹாக் பின் ராஹுயா رحمهما الله ஒட்டக கறி மற்றும் உளூ முறிவதை பற்றி கூறியுள்ளார்கள். இது சம்பந்தமாக இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. ஜாபிர் மற்றும் அல்-பராஅ رضي الله عنهما இருவருடைய அறிவிப்பும் ( மேற்கூறிய இரண்டும் ). பெரும்பான்மையான அறிஞர்களின் கூற்று இது அல்ல என்றாலும் , இந்த மத்ஹப்தான் பலமானதாகும். 

இரண்டாவது : ஒட்டக கறி சாப்பிடுவது ஏன் உளூவை முறிக்கிறது?

சில அறிவிப்புகளில் அறிவிக்கபட்டுள்ளதாவது , ஒட்டகத்திற்கு ஷைத்தானின் சில குணங்கள் உள்ளன. ஆகையால், அதன் இறைச்சியை சாப்பிடுபவருக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம். அதனால் அதை சாப்பிட்ட பிறகு உளூ செய்ய கட்டளை இடப்பட்டுள்ளது. ஒரு ஹதீஸில் குறிப்பிட பட்டுள்ளது : 

لَا تُصَلُّوا فِي مَبَارِكِ الْإبِلِ فَإنَّهَا مِنْ الشَّيَاطِينِ

“ ஒட்டகம் வாழும் இடத்தில் தொழாதீர்கள். நிச்சயமாக அவைகள் ஷைத்தான்களில் உள்ளவை.” உளூ செய்வதின் மூலம் தீய விளைவுகள் நீங்குகிறது. 

மேலும், கூறப்படுவதாவது ஒட்டகம் பிடிவாதமும் மூர்க்கத்தனமும் ஆன மிருகம் ஆகும், ஒருவர் இதை சாப்பிடுவதால் பாதிக்கப்படலாம். உளூ செய்வது ஒரு மனிதனை தாழ்மையும் அமைதியும் கொள்ளச் செய்யும். 

இதுதான் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வே சிறந்ததை அறிவான்.

தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை

Comments