Posts

வீட்டில் தனியாக தொழும்போது , பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு ) மற்றும் இகாமத் கூறுவதற்கான சட்டம் என்ன?

Image
கேள்வி : வீட்டில் தனியாக தொழும்போது , பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு ) மற்றும் இகாமத் கூறுவதற்கான சட்டம் என்ன? கேள்வியாளர் இன்றைய சோகமான சூழ்நிலையில் வீட்டில் தொழும் பொழுது கூறவேண்டியது பற்றி கேட்கிறார் என்று எண்ணுகிறேன்.  மஸ்ஜிதில் ஜமாத் தொழுகையை தவற விட ஆரோக்கியமான எந்த ஆணுக்கும் அனுமதி இல்லை.  அவருக்கு இது கடமையாகும்.  இதன் பிறகு, தனியாக தொழும்பொழுது, மஸ்ஜிதில் அல்லாமல், பாங்கும் இகாமத்தும் கூறுவது பரிந்துரைக்கப் பட்டதாகும்.  பெரும்பாலான அறிஞர்களின் கருத்து இதுவாகும். ஹனபி, ஷாஃபி, ஹம்பலி மற்றும் மாலிக்கி மத்ஹப்களின் கருத்தும் இதுவேயாகும். இது பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அவர்கள் கூறும் ஆதாரங்கள் : அபூ-ஸயீத் அல் குத்ரீ رضي الله عنه அறிவிப்பதாவது “ (இந்த ஸஹாபா தனது தோழரிடம் கூறினார்கள்) உன்னுடைய மந்தையை பாதியாவின் வெளியில் மேய்ப்பது உனக்கு விருப்பமானது என்று நான் அறிவேன். நீ உன்னுடைய ஆடுகளுடன் நகரத்தின் வெளியில் இருக்கும் பொழுது சப்தமாக பாங்கு கூறுவீராக. நிச்சயமாக நான் நபி ﷺ கூற கேட்டேன், “ ஜின்களும் மனிதர்களும் ஏனைய படைப்பினங்களு...

சஜ்தாவின் பொழுது கால்களை எவ்வாறு வைப்பது?

Image
சஜ்தாவின் பொழுது கால்களை எவ்வாறு வைப்பது? இந்த விசயத்தில் உலாமாக்கள் இடையே கால்களை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.  முதல் கருத்து: சஜ்தாவின் போது கால்களை பிரித்து வைக்க வேண்டும். இது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாக உள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் கூறுவது, ஹதீஸில் சஜ்தாவின் போது இரண்டு மூட்டிகாலையும் தொடைகளையும் பிரித்து வைக்கவேண்டும் என்று உள்ளது. கால்களும் இதில் சேரும் என்று கூறுகிறார்கள்.  இந்த கோணத்தில் , அபூ தாவூத் رحمه الله  தன்னுடைய சுனனில் 735 , நபி ﷺ விடம் இருந்து உள்ள ஹதீஸை குறிப்பிடுகிறார்கள் : அந்த ஹதீஸில் நபி ﷺ எவ்வாறு தொழுதார்கள் என்று அபூ ஹுமைத் رضي الله عنه குறிப்பிடுகிறார்கள் :  و إذا سجد فَرَّج بين فخذيه “மேலும் அவர்கள்( நபி ﷺ) சஜ்தாவில் அவர்களுடைய தொடையை அகற்றி வைத்திருப்பார்கள். “ அஷ்-ஷௌகானி رحمه الله கூறினார்கள் : ஹதீஸில் உள்ள “ அவர்கள் ﷺ தொடைகளை பிரித்து வைத்தார்கள் “ என்றால் இரண்டு தொடை, இரண்டு மூட்டு மற்றும் கால்களை பிரித்து வைப்பது”. ஷாஃபி மத்ஹபில் இது பிரபலம் ஆனதால் இது இங்கே நம்மிடம் ...

ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்வது.

Image
ஒட்டக கறி சாப்பிட்ட பின் உளூ செய்வது.  முதலாவதாக: அறிஞர்கள் இடையே இதற்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன.  முதல் கருத்து:- பெரும்பாலான அறிஞர்களுடையது, ஒட்டக கறி சாப்பிட்டால் உளூ முறியாது.  இரண்டாவது கருத்து:- ஒட்டக கறியை சமைக்காமலோ சமைத்தோ சாப்பிட்டாலும் உளூ முறிந்துவிடும். எனினும், ஒட்டக பாலை குடிப்பதாலோ அல்லது ஒட்டக கறி சமைக்க பயண்படுத்திய தண்ணீரை உபயோகிப்பதாலோ அல்லது ஒட்டக கறி சேர்க்கப்பட்டதை சாப்பிடுவதாலோ உளூ முறியாது.  ஒட்டக கறி சாப்பிட்டால் உளூ முறியும் என்னபதற்கு ஆதாரம் ஜாபிர் பின் ஸமூரா رضي الله عنه அறிவிக்க கூடிய ஹதீஸ் : أن رجلاً سأل رسول الله صلى الله عليه وسلم: أأتوضأ من لحوم الغنم؟ قال: “إن شئت فتوضأ وإن شئت فلا توضأ”، قال: أتوضأ من لحوم الإبل؟ قال: “نعم، فتوضأ من لحوم الإبل”، قال: أصلي في مرابض الغنم؟ قال: نعم، قال: أصلي في مبارك الإبل؟ قال: لا  “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் ﷺ கேட்டார் , ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் உளூ செய்ய வேண்டுமா என்று. அவர்கள் ﷺ கூறினார்கள் : நீ விரும்பினால் உளூ செய்துகொள், நீ விரும்ப வில்லை என்றால் செய்...

விளையாட்டுகள்/கேளிக்கைகள் விளையாட அனுமதி உண்டா?

Image
விளையாட்டுகள்/கேளிக்கைகள் விளையாட அனுமதி உண்டா? இது தொடர்பாக பல்வேறு குறிப்புகளை என்னுடைய பதிலில் கூறுகிறேன். முதலாவதாக: கேளிக்கை என்பது அனுமதிக்கப்பட்டதாகும். எனினும், சில விதிவிலக்குகள் உள்ளன. யாராலும் அலுப்பும் களைப்பும் அடையாமல், எல்லா நேரமும் அல்லாஹுவை வணங்கி கொண்டே இருக்க இயலாது. ஆகையால், தனக்குத்தானே மகிழ்ச்சியும் திருப்தியும் கொடுத்துக் கொள்வது உரிமையாகும். எனினும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் ஹலால் ஹராம் பேணாமல் இருப்பது ஏற்புடையது அல்ல.  இரண்டாவதாக: சில விளையாட்டுகள் மார்க்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில விளையாட்டுகள் ஜிஹாதிற்க்கு பயிற்சி அளத்து ஒருவரது தைரியத்தையும் உறுதிப்பாட்டையும் அதிகப்படுத்துகிறது. நீச்சல் , குதிரையேற்றம் மற்றும் வில்வித்தை போன்றவை நல்ல பொழுதுபோக்காகும்.  நபி ﷺ கூறியதாக ஸஹீஹ்ல் புஹாரில் குறிப்பிடபட்டுள்ளது: ارْمُوا بَنِي إسْمَاعِيلَ فإنَّ أبَاكُمْ كانَ رَامِيًا “இஸ்மாயீலின் சந்ததியினரே! வில்வித்தையில் சிறந்து விளங்குங்கள்! நிச்சயமாக உங்களுடைய தந்தை வில்வித்தையில் ஈடுபட்டவராக இருந்தார்.” மூன்றாவதாக : ...

பெண்களை தொடுவதினால் உளூ முறிந்துவிடுமா?

Image
பெண்களை தொடுவதினால் உளூ முறிந்துவிடுமா? பெண்களை தொடுவதினால் உளூ முறிந்துவிடுமா என்பதில் அறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.  முதல் கருத்து: ஒரு பெண்ணை தொடுவதினால் எல்லா சந்தர்ப்பங்களிலும் உளூ முறிந்துவிடும்.  அதாவது , இச்சையுடனோ, இச்சை இல்லாமலோ, நோக்கத்துடனோ, நோக்கம் இல்லாமலோ அல்லது அறியாமல் தொடுவதாலோ. இது அஷ்-ஷாஃபி رحمه الله வின் மத்ஹப் உடைய கருத்தாகும்.  இது ஷாஃபி மதுஹபின் கருத்தானதால் இப்படி தொடுவதினால் உளூ முறிந்து விடும் என்பது பரவலான கருத்தாக உள்ளது. எனினும், ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களில் இதுவே மிக பலகீனமாதாகும். இது குறித்து இமாம் ஷாஃபி رحمه الله குறிப்பிடுகிறார்கள்: சில ஆதாரங்களின் அடிப்படையில் ‘தீண்டுவது’ என்பதை இவ்வாறு அர்த்தம் செய்துள்ளார்கள். அதில் ஒன்று , அல்லாஹ் கூறுகிறான் :  أَو لا مَسْتُمُ النِّسَاء  நீங்கள் பெண்களைத் தீண்டுவதினாலோ.   இந்த ஆயத்தின் பொருள் தீண்டுவது என்பதால் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள். எனினும், சந்தேகத்திற்கு இடமில்லாமல் தீண்டுவதின் பொருளை தஃப்ஸீரில் பார்போமானால...

வெள்ளி கிழமைகளில் நோன்பு வைப்பது தொடர்பான சட்டம் என்ன?

Image
வெள்ளி கிழமைகளில் நோன்பு வைப்பது தொடர்பான சட்டம் என்ன? வெள்ளி கிழமை நோன்பு வைப்பதில் ஒன்றல்ல பல முறைகள் இருக்கின்றன.  மதீனாவில் உள்ள உலாமாக்களின் இது தொடர்பான கூற்றை நமது ஷேக் Dr. அரபாத் பின் ஹஸன் அல்-முஹம்மதீ حفظه الله விரிவாக விவரித்துள்ளார்கள்.  ஷேக் 4 சந்தர்ப்பங்களை கூறுகிறார்கள் : முதல் சந்தர்ப்பம் :  கடமையான நோன்பை நோற்பது, கஃபாரா (பிராயசித்தமாக உள்ள )நோன்பு , கதா நோன்பு ( ரமழானில் விடுபட்ட நோன்பை பிடிப்பது). இந்த சந்தர்ப்பங்களில் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது ஆகுமானதாகும் என்று எல்லா அறிஞர்களும் குறிப்பிடுகிறார்கள்.  இரண்டாம் சந்தர்ப்பம்:  வெள்ளிக்கிழமைகளில் சுன்னத் நோன்பு நோற்பது. உதாரணமாக ஹிஜ்ரி மாதத்தின் 13,14 மற்றும் 15 ம் நாட்களில் நோன்பு அல்லது ஆஷூரா தினத்தில் நோன்பு அல்லது அரபா தினத்தில் நோன்பு ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வந்தால், இந்த நோன்புகளை நோற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நோன்பு எதுவும் ஒருவர் வெள்ளிக்கிழமை என்ற காரணத்தினால் பிடிப்பது அல்ல.  மூன்றாம் சந்தர்ப்பம் : வெள்ளிக்கிழமைக்கு ஒரு நாள் முன...

இரண்டு சஜ்தாவிற்கு இடையில் திக்ரு கூற மறந்து மீதம் உள்ள தொழுகையை நிறைவு செய்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

Image
இரண்டு சஜ்தாவிற்கு இடையில் திக்ரு கூற மறந்து மீதம் உள்ள தொழுகையை நிறைவு செய்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதற்கான பதிலை அறிவதற்கு முன், தொழுகையில் உள்ள கடமைகளை பற்றி அறிந்திருத்தல் வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.  தொழுகையின் கடமைகள்: தொழுகையின் கடமைகள் எட்டு.  1.முதல் தக்பீரை தவிர எல்லா தக்பீர்களும்.  2.ருக்கூவில் கூறும் திக்ர் “ سبحان ربي العظيم" 3.இமாமாக இருப்பவரும் தனியாக தொழுபவரும் ருக்கூவில் இருந்து எழும்போது கூறவேண்டியது.  “سمع الله لمن حمده" 4.தொழுபவர்கள் அனைவரும் அதை தொடர்ந்து கூறவேண்டிய   “ربنا و لك الحمد" 5.சுஜூதில் கூற வேண்டிய திக்ர். “سبحان ربي الأعلى" 6.இரண்டு சுஜூதிற்கு நடுவே கூற வேண்டிய திக்ர்.  “رب إغفرلي" 7.முதல் தஷஹ்ஹுதில் இருப்பது.  8.முதல் தஷஹ்ஹுதின் இருப்பில் கூற வேண்டிய திக்ருகள்.  மறதியினால் இதில் ஏதாவது கடமையை விட்டுவிட்டால் , மறதிக்கான சஜ்தா செய்யும் பொழுது இந்த கடமை நிறைவேறிவிடும், தொழுகை முழுமை பெறும்.  கேள்வியில் கேட்கப்பட்...